பிரபல பாடகர் சேனக படகொட “அபி கவுருடா” மற்றும் “அபி செனசில்லே” உட்பட ஏழு பிரபலமான பாடல்களை பாடுவதற்கு தடை விதித்து தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அறிவுசார் சொத்துரிமை சட்டத்தின் கீழ் இசையமைப்பாளர் ஜனாத் குலதிலகவினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டினை பரிசீலித்த கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றத்தினால் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 02) இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பாடகர் சேனக படகொட தனக்கு வழங்கப்பட வேண்டிய பொருளாதார நன்மைகளை வழங்காமல் தனது அறிவுசார் சொத்துரிமை மற்றும் காப்புரிமையை மீறியுள்ளதாக குலத்திலக்க இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
மேலும் பாடகர் சேனக படகொடவினால் ஏற்பட்ட சேதத்திற்கு 100 மில்லியன் ரூபா நட்டஈடு கோரியுள்ளார்.
சேனக படகொட பாடிய சொல்லப்பட்ட ஏழு பாடல்களின் ஒருங்கிணைந்த வரிகள், மெல்லிசை மற்றும் இசையமைப்பாளர் குலதிலக்கவையே சாரும்.
மனுதாரரின் எழுத்துமூல அனுமதியின்றி குறித்த பாடல்களை வேறு தரப்பினருக்கு வழங்க முடியாது எனவும் கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்ற நீதிபதி பிரியந்த பெர்னாண்டோ உத்தரவிட்டுள்ளார்.
“அபி கவுருடா”, “அபி செனசில்லே”, “அலு யாத கினி”, “ரஸ்தா”, “ஹீன வளதா பனக் தியெனாவா”, “செனசுமா” மற்றும் “ஹொடமா தே” ஆகிய ஏழு பாடல்கள் தடை உத்தரவின் கீழ் தடை செய்யப்பட்டன.