வளி மாசடைவதனை அளவீடு செய்வதற்கான சில கருவிகள் இலங்கைக்கு வழங்கப்பட்டன!

வளி மாசடைவதனை அளவீடு செய்வதற்காக உலக சுகாதார ஸ்தாபனம் இலங்கைக்கு சில கருவிகளை வழங்கியுள்ளது.

சுற்றாடல் அதிகாரசபையின் வளி மாசடைதல் பிரிவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி சஞ்சய ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த கருவிகள் யாழ்ப்பாணம், அநுராதபுரம் மற்றும் குருணாகல் ஆகிய நகரங்களில் பொருத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வளி மாசடையும் போது அவற்றை அளவீடு செய்ய இந்த கருவிகள் உதவும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Exit mobile version