அரசாங்கத்தின் வரி சீர்திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் கறுப்புப் போராட்டம்!

அரசாங்கத்தின் வரி சீர்திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஜனவரி இறுதி வாரத்தை கறுப்பு போராட்ட வாரமாக பிரகடனப்படுத்தவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி நாடளாவிய ரீதியில் எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஊடக குழு உறுப்பினர் பிரசாத் கொழும்பகே எமது செய்தி பிரிவுக்கு தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மருத்துவமனைகளையும் உள்ளடக்கிய 20,000 மருத்துவர்களிடம் கையெழுத்து மனுவொன்று தற்போது தயாரிக்கப்பட்டு வருகின்றது.

எதிர்வரும் ஜனவரி மாதம் 10ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் குறித்த மனு கையளிக்கப்படவுள்ளது.

Exit mobile version