உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம்: 25 சந்தேகநபர்களின் பிணை கோரிக்கை நிராகரிப்பு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நௌபர் மௌலவி உட்பட 25 சந்தேகநபர்களின் பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பில் 13,270 குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் பிணை கோரிக்கை இன்று (வியாழக்கிழமை) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, இதுதொடர்பான பிணை கோரிக்கையை மூவரடங்கிய நீதிபதிகள் குழு நிராகரித்துள்ளது.

Exit mobile version