உத்தேச மின் கட்டண உயர்வை ஏற்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மறுப்பு!

உத்தேச மின் கட்டண உயர்வை ஏற்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மறுத்துள்ளது.

இலங்கை மின்சார சபை கூறுவது போன்று பாரிய நட்டத்தை ஏற்படுத்தாததாலும், தவறான பெறுமதிகளின் அடிப்படையில் இந்த பிரேரணை வகுக்கப்பட்டுள்ளதாலும் உத்தேச உயர்வை ஏற்றுக்கொள்ள முடியாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கான தீர்மானத்தை மேற்கொள்ளும் போது நாட்டின் சாதாரண வரிக் கொள்கை மீறப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

Exit mobile version