நானுஓயாவில் கோர விபத்து – 7 பேர் உயிரிழப்பு – 42 மாணவர்கள் படுகாயம்..!

நானுஓயா – ரதல்ல குறுக்கு வீதியின் சமர் செட் பகுதியில் பஸ் ஒன்றும் வேன் ஒன்றும் மோதி விபத்துள்ளானது.

இதில் வேனில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

ஹட்டன் டிக்கோயா பகுதியிலிருந்து நுவரெலியா நோக்கிச் சென்ற வேன் ஒன்றை கொழும்பிலிருந்து பாடசாலை மாணவர்களை சுற்றுலாவிற்கு ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று மோதியதிலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

இதில் பஸ்ஸில் பயணித்த 42 பேர் படுகாமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த பஸ் சுமார் 200 அடி பள்ளத்தில் வீழ்ந்திருப்பதாகவும், அங்கு இருள் காரணமாக மீட்பு நடவடிக்கையை மேற்கொள்ள முடியாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Exit mobile version