யாழில் போதை மருந்து வைத்திருந்தவரை பொலிஸில் ஒப்படைத்த இளைஞர்கள்

தெல்லிப்பழை – நரியிட்டான் பகுதியில் போதை மாத்திரைகளை வைத்திருந்த இளைஞர் ஒருவரை அந்தக் கிராமத்து இளைஞர்கள் மடக்கிப் பிடித்து பொலிஸில் ஒப்படைத்தனர்.

பிடிபட்ட இளைஞனிடமிருந்து 8 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவ்வாறு பிடிபட்டவர் மணற்புலம், அளவெட்டியைச் சேர்ந்த 25 வயது இளைஞராவார். பிடிக்கப்பட்ட இளைஞன் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக் கப்பட்டார்.சம்பவம் தொடர்பான மேல திக விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதேவேளை கிராமத்து இளைஞர் களின் முன்மாதிரியான செயலுக்கு பலரும் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.
Exit mobile version