நைஜீரியாவில் குண்டு வெடிப்பு – 54 பேர் உயிரிழப்பு..!

நைஜீரியாவின் வட மத்திய பகுதியில் உள்ள நசராலாபெனு மாகாணங்களுக்கு இடையே குண்டு வெடித்தில், கால் நடை மேய்ப்பவர்கள், பொதுமக்கள் என 54 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த குண்டு வெடிப்பை நிகழ்த்தியது யார் என்பது தெரியவில்லை. வடமத்திய நைஜீரியாவில் கால்நடை மேய்ப்பவர்களுக்கும், விவசாயிகளுக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக நசராலா மாகாண ஆளுநர் தெரிவிக்கையில், “இந்த சம்பவத்தால் ஏற்படக்கூடிய பதட்டத்தை தணிப்பதை உறுதி செய்வதற்கு பாதுகாப்பு நிறுவனங்களை சந்தித்து வருகிறோம்” என்றார்

Exit mobile version