இஸ்ரேலின் கிழக்கு ஜெருசலேமில் உள்ள நிவி யாகொவ் பகுதியில் யூத வழிபாட்டுத் தலம் அருகே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. காரில் வந்த தீவிரவாதி தான் வைத்திருந்த துப்பாக்கியால் அங்கிருந்த இஸ்ரேலியர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினார்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் 7 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். மேலும், சிலர் படுகாயமடைந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய பயங்கரவாதியை இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தினர். இந்தத் தாக்குதலில் பலர் படுகாயமடைந்த நிலையில் அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
