இலங்கையில் தொழுநோயாளிகளில் 10 வீதமானோர் சிறுவர்கள்

இலங்கையில் தொழுநோயாளிகளில் 10 வீதமானோர் சிறுவர்கள் என கண்டறியப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சந்தன கஜநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) உலக தொழுநோய் தினத்தை முன்னிட்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்படி இலங்கையில் வருடாந்தம் சுமார் 2,000 தொழுநோயாளிகள் பதிவாகுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தொழு நோய் ஏற்பட்ட ஒருவரின் உடலில் நீண்ட காலமான வௌ்ளை அடையாளம் மட்டும் காணப்படுவதால் அதனை அவர்கள் நோயாக கருதி செயற்படுவதில்லை எனவும் வைத்திய நிபுணர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version