மசூதியில் குண்டு வெடிப்பு – 19 பேர் பலி..!

பாகிஸ்தானின் வடமேற்கில் இருக்கும் பெஷாவர் நகரில் உள்ள மசூதியில் ஒன்றில் இன்று சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்தது.

இந்த சம்பவத்தில் 19 பேர் உயிரிழந்துடன் 50க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று மதியம் தொழுகையின்போது, தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியவர் முன் வரிசையில் இருந்ததாகவும், அவர் தன்னைத்தானே வெடிக்கச் செய்ததாகவும் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் 13 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக ஜியோ நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

Exit mobile version