முட்டை உபயோகப்படுத்துபவர்களுக்கான எச்சரிக்கை..!

#egg #newsinfirst

#egg #newsinfirst

இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை பேக்கரி தொழிலில் பயன்படுத்துவதற்கான தொடர் வழிகாட்டல்களை தயாரிக்குமாறு கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்திற்கு அமைச்சர் மஹிந்த அமரவீர பணிப்புரை விடுத்துள்ளார்.

அதன்படி இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை பேக்கரி பொருட்களுக்கு பயன்படுத்தும் போது ​​கையுறைகளை பயன்படுத்த வேண்டும் மற்றும் முட்டை ஓடுகளை பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும் அல்லது அழிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

அத்தோடு மீதமுள்ள முட்டை ஓடுகளை சுற்றுச்சூழலில் வெளியிடக்கூடாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பல நாடுகளில் பரவி வரும் பறவைக் காய்ச்சல் வைரஸ் நுழைவதைத் தடுக்கும் நோக்கில் இந்த வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இலங்கை சந்தையில் ஏற்பட்டுள்ள முட்டை தட்டுப்பாட்டைக் குறைப்பதற்காக முட்டைகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

Exit mobile version