தேர்தல் திட்டமிட்டபடி நடக்காது – தேர்தல் ஆணைக்குழு நீதிமன்றுக்கு அறிவிப்பு..!

திட்டமிட்டபடி 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு இதை உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

மார்ச் 09 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு போதிய நிதி இல்லாமை உள்ளிட்ட சிரமங்களை மேற்கோள் காட்டி தேர்தல்கள் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்து இதனை அறிவித்துள்ளது.

Exit mobile version