துருக்கி – சிரியா எல்லை பகுதியில் இரண்டு வாரங்களுக்கு பின்னர் நேற்று மீண்டும் பாரிய நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் 6.4 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதவிபரங்கள் தொடர்பில் இதுவரை தகவல்கள் வெளியிடப்படவில்லை.
துருக்கியில் கடந்த 6ம் திகதி ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் 41000 திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
அதேபோன்று, இந்த நிலநடுக்கத்தினால் சிரியாவிலும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
