மனித நுகர்வுக்கு தகுதியற்ற 18% சிற்றுண்டிச்சாலைகள்

இலங்கையிலுள்ள சுமார் 18% உணவகங்கள் திருப்தியற்ற நிலையில் உள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் (PHI) சங்கம் தெரிவித்துள்ளது.

மேற்படி உணவகங்கள் மற்றும் ஹோட்டல்களை அபிவிருத்தி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார். அங்கு மனித நுகர்வுக்குத் தகுதியற்ற உணவுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. மேலும் 27% சராசரி நிலையிலும் மற்றும் 55% மிகவும் சிறந்த நிலையிலும் உள்ளன. இலங்கையின் ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் 2022 பொதுச் சுகாதார பரிசோதகர்கள் உணவு நுகர்வு வகைப்பாடு அமைப்பு படிவத்தின் கணக்கெடுப்பு தரவுகளின்படி இந்தத் தரவை வெளியிட்டுள்ளது.

தரவுகளின்படி, A பிரிவில் ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் 55% மும், B பிரிவில் ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் 27% மும், மற்றும் C பிரிவில் திருப்தியற்ற நிலையில் 18 சதவீதமான ஹோட்டல் மற்றும் உணவகங்களும் காணப்படுகின்றன. மனித நுகர்வுக்குத் தகுதியற்ற உணவை உற்பத்தி செய்யும் 18% ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களை அபிவிருத்தி செய்வதற்காக அவற்றை குறைந்தபட்சம் B வகைக்கு கொண்டு வருவதற்காக தேவையான அறிவுறுத்தல்கள், ஒழுங்குபடுத்தல்கள் போன்று தேவைப்படும்போது சட்ட நடவடிக்கை எடுப்பது போன்ற நடவடிக்கைகளிலும் சங்கம் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளது.

Exit mobile version