நீதிபதிகளிடம் இருந்து வசூலிக்கப்படும் வரிகள் மீதான இடைக்கால உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது

திபதிகளினால் பெறப்படும் சம்பளத்தில் செலுத்தும் வரியை அமுல்படுத்துவதைத் தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று நீடித்துள்ளது.இந்த இடைக்கால உத்தரவு மார்ச் 1ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான மனு மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் நீதிபதி நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் நீதிபதி ஏ மரிக்கார் ஆகியோரால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.மாவட்ட நீதிபதிகள் மற்றும் நீதிவான்கள் சங்கத்தினால் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் நீதிபதிகளிடமிருந்து செலுத்தும் வரிகளை வசூலிப்பதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவைக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.நீதிபதிகள் நிர்வாகத்தை பிரதிநிதித்துவப்படுத்தாத ஒரு சுயேச்சையான குழுவாக இருப்பதால், அவர்களிடம் இருந்து வரி வசூலிக்க உள்நாட்டு இறைவரி திணைக்கத்திற்கு சட்டப்பூர்வ அதிகாரம் இல்லை என மனுதாரர் தெரிவித்துள்ளார்.நீதிபதிகளிடமிருந்து வரியைப் பெறுவதற்கான நீதி அமைச்சின் தீர்மானத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
Exit mobile version