இலங்கையின் பேருந்துகளால் ஆபத்து..!

50 சதவீதத்திற்கும் அதிகமான பேருந்துகளில் வளி மாசடையும் வகையில், புகை வெளியேறுவதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

பெப்ரவரி மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் போது, இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் வளி வெளியேற்றும் வேலைத்திட்டத்தின் செயற்திட்ட பணிப்பாளர் ஐ.ஜீ தசுன் ஜனக தெரிவித்துள்ளார்.

கொழும்பு பெஸ்டியன் மாவத்தை பகுதியில் இது தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே இலங்கையில் வளி மாசடைதல் தொடர்பில் சூழலியலாளர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version