இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மீதான விசேட பண்ட வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.
குறித்த வரி 30 ரூபாவினால்
அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இறக்குமதி செய்யப்படும் உருளை கிழங்கு கிலோகிராம் ஒன்றின் மீது 50 ரூபா விசேட பண்ட வரியாக விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வரியானது நேற்று முதல் ஆறு மாதங்களுக்கு அமுலாகும் வகையில் விதிக்கப்படுமென நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
