ஆட்சி செய்யும் சுக்கிரனால் ஆட்டம் காணப் போகும் 5 ராசிகள் – கவனமாக இருந்தால் தப்பிக்கலாம்

ஜோதிடத்தில் களத்திரகாரகன், ஆடம்பரங்கள், வசதியைத் தரக்கூடியவர் சுக்கிர பகவான். இவர் ரிஷப ராசியில் ஆட்சி, அதிபதியாக சஞ்சரிக்க உள்ளார். இதனால் சில ராசியினருக்கு தங்களின் வாழ்க்கையில் சில சிக்கல்களைச் சஞ்சரிக்க வாய்ப்புள்ளது.

சுக்கிர பகவான் ஏப்ரல் 6ம் தேதி ரிஷப ராசிக்கு பெயர்ச்சி ஆக உள்ளார். அன்பு, அழகு, உடல் சுகம், ஈர்ப்பு ஆகிய அம்சங்களைத் தரக்கூடியவர் சுக்கிரன். இவர் ரிஷப ராசி அதிபதி ஆவார். தற்போது ரிஷப ராசியில் மே 2 வரை ஆட்சி, அதிபதியாக சஞ்சரிக்க உள்ளதால் தனி நபர்களுக்கு மட்டுமல்லாமல் நாடுகளுக்கும், உலகம் பொருளாதாரம், குடும்ப வாழ்க்கை, தொழில் உள்ளிட்ட அனைத்து விஷயங்களிலும் தாக்கம் இருக்கும்.
எந்த ராசியினருக்கெல்லாம் சற்று மோசமான பலன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது என்பதைப் பார்ப்போம்.

மிதுன ராசி

மிதுன ராசிக்கு 12ம் வீடான விரய ஸ்தானத்தில் சுக்கிரன் சஞ்சரிக்கிறார். அடுத்த ஒரு மாத காலத்திற்கு உங்கள் வேலையில் சற்று கவனமாக செயல்படுவது அவசியம். வியாபாரத்தை விரிவுபடுத்த, முதலீடு செய்வதில் கவனமாக இருப்பது நல்லது. புதிய திட்டங்களை தற்காலிகமாக ஒத்தி வைப்பது நல்லது.

சிம்ம ராசி

சிம்ம ராசிக்கு இந்த சுக்கிர பெயர்ச்சியான சுமாரான பலனைத் தருவதாக இருக்கும். எந்த வகையான முதலீட்டையும் தவிர்ப்பது நல்லது. நிதி விஷயங்களை கவனமாக கையாளவும். பயணங்கள் சில கஷ்டத்தை, அலைச்சலைத் தர வாய்ப்புள்ளது.

வேலைத் தேடும் இளைஞர்களுக்கு சற்று தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்களின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. உங்கள் பொருட்கள் சில பொருள் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

விருச்சிக ராசி

விருச்சிக ராசிக்கு சப்தம ஸ்தானத்தில் சுக்கிரன் சஞ்சரிக்கிறார். அடுத்த ஒரு மாத காலத்தில் உத்தியோகஸ்தர்கள், சம்பளம் வாங்கக்கூடியவர்களுக்கு சில இடையூறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

தனுசு ராசி

தனுசு ராசிக்கு நோய், எதிரி ஸ்தானத்தில் சுக்கிரன் சஞ்சரிக்கிறார். தனுசு ராசி அதிபதி குருவின் பகை கிரகமான சுக்கிரன் ஆட்சி பெறுவதால் தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துவது நல்லது.

பிள்ளைகளின் கல்வி சம்பந்தமாகப் பெற்றோர் கஷ்டப்பட நேரிடும். தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துவது நல்லது. உணவு மற்றும் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்தவும்.

மீன ராசி

சுக்கிரன் ஆட்சி பெறுவதால் மீன ராசிக்கு சில ஏற்ற இறக்கமான பலன் உண்டாகும். இந்த நேரத்தில், பணிபுரிபவர்கள் அதிகாரிகளால் அதிக வேலை அழுத்தத்தைச் சந்திக்க நேரிடும். இதனால் மன உளைச்சலைச் சந்திக்க நேரிடும். இந்த காலகட்டத்தில் தேவையற்ற செலவுகளிலிருந்து விலகி இருப்பது அவசியம். இல்லையெனில் நிதி நிலைமை மோசமடையக்கூடும்.

நண்பர்களுடன் எந்த விதமான ஒழுக்கக்கேடான செயல்களில் இருந்து விலகி இருப்பது நன்மை தரும். பெற்றோருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

Exit mobile version