இந்தியாவால் தேடப்பட்ட பயங்கரவாதி கனடாவில் சுட்டுக்கொலை

murder

இந்தியாவால் தேடப்பட்டு வந்த பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட நபர் ஒருவர் கனடாவில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

பஞ்சாப்பை பூர்வீகமாக கொண்ட ஹர்தீப் சிங் நிஜர் என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் இந்து மத போதகரை கொலை செய்ய திட்டமிட்டதாக காலிஸ்தான் புலி படை என்ற தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர்கள் 40 பேரை இந்திய மத்திய புலனாய்வு துறை கடந்த வருடம் பயங்கரவாதிகளாக அறிவித்தது.

இந்த அமைப்பின் தலைவனாக ஹர்தீப் சிங் செயல்பட்டு வந்தார்.

சுட்டுக்கொலை

ஹர்தீப் சிங் நிஜர் கனடா நாட்டில் குடியுரிமை பெற்று அங்கு வசித்து வந்ததுடன், ஹர்தீப்பை கைது செய்ய இந்திய அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வந்தது.

இந்தநிலையில், காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் கனடாவின் சுரே பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

Exit mobile version