யாழ். அராலி மேற்கு – நீளத்திக்காடு ஸ்ரீ பேச்சியம்பாள் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவமானது கடந்த (2023.06.20) அன்று ஆரம்பமான நிலையில் சிறப்பாக இடம்பெற்று வருகிறது.
அந்த வகையில் நேற்றையதினம் (27.06.2023) 7ஆம் திருவிழாவான வேட்டைத்திருவிழா வெகுவிமர்சையாக இடம்பெற்றுள்ளது.
இதன்போது அம்பாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளி வலம் வந்ததை தொடர்ந்து பேச்சியம்பாள் ஆலய வேட்டைத்திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றுள்ளது.
