ஞாயிற்றுக்கிழமை நயன்தாரா தன் மகன் உயிருடன் இருந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கும், இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் உயிர், உலக் என இரட்டை மகன்கள் இருக்கிறார்கள். அவர்களுடன் அதிக நேரம் செலவிட விரும்பி கூடுதல் படங்களில் நடிக்க ஒப்புக்கொள்ளாமல் இருக்கிறார் நயன்தாரா.
தங்களின் செல்ல மகன்களின் புகைப்படத்தை அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு தன் மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார் விக்னேஷ் சிவன்.
இந்நிலையில் நயன்தாரா தன் செல்ல மகன் உயிருடன் கொஞ்சி விளையாடியபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கிறார் விக்னேஷ் சிவன். நயன்தாராவின் கழுத்தில் இருக்கும் செயினுடன் உயிர் விளையாடிய அந்த புகைப்படத்திற்கு லட்சக் கணக்கில் லைக்ஸுகள் வந்து குவிந்துவிட்டது.
அந்த க்யூட் புகைப்படத்தை வெளியிட்டு, என் உயிர்ஸ் என தெரிவித்துள்ளார் விக்னேஷ் சிவன். அவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து முதல் ஆளாக கமெண்ட் போட்டவர் நடிகை ஸ்ருதி ஹாசன் தான்.
எவ்வளவு பிரச்சனை இருந்தாலும் வீட்டிற்கு வந்து நயன்தாரா, பிள்ளைகளின் முகத்தை பார்த்தால் அனைத்தும் மறந்துவிடுகிறது என்கிறார் விக்னேஷ் சிவன். ஆனால் அந்த மகன்களின் முகத்தை காட்டாமலேயே இருக்கிறீர்களே. கொஞ்சம் முகம் தெரியும்படி புகைப்படம் வெளியிடுங்கள் அன்பான இயக்குநரே என்கிறார்கள் ரசிகர்கள்.
கெரியரை பொறுத்தவரை பிரதீப் ரங்கநாதனை ஹீரோவாக வைத்து படம் இயக்க தயாராகி வருகிறார். முன்னதாக அவர் அஜித் குமாரின் ஏ.கே. 62 படத்தை இயக்குவதாக இருந்தது. படப்பிடிப்பு துவங்க வேண்டிய நேரத்தில் இயக்குநரை மாற்றிவிட்டார்கள்.
