கண்டி, ஹந்தான மலைத்தொடரில் சிக்கியிருந்த 180 மருத்துவ பீட மாணவர்களும் மீட்பு.

ஹந்தான மலைத்தொடரில் சிக்கியிருந்த ராகம மருத்துவ பீட மாணவர்கள் 180 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட மீட்பு நடவடிக்கையின் போதே அவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோசமான வானிலை மற்றும் கடும் பனிமூட்டம் காரணமாக குறித்த மாணவர்கள் நேற்றைய தினம் (02) அங்கு சிக்குண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version