சாய்ந்­த­ம­ருது மத்­ர­சா­வில் நடந்­தது என்­ன?

‘‘தலையில் தொப்பி போடாது, நின்று கொண்டு ‘சூ’ பெய்­தி­ருக்­கி­றான். ஆளை அடித்து வளர்த்­தாட்­­டி­யி­ருக்­கி­றேன்’’

சாய்ந்­த­ம­ருது சபீலிர் ரசாத் மத்­ர­சாவில் மாண­வர் ஒருவர் மர­ணித்­த பிற்­பாடு அம் மத்­ரஸாவின் நிர்­வா­கி­யா­ன மெளலவி சானாஸ் சொன்ன வார்த்­தை­கள்தான் இவை.

பின்னர் தன்னால் அடித்து வளத்­தாட்­டப்­பட்ட மாண­வனை பாம்பு கடித்­து­விட்­ட­தா­க­வும், தூக்கில் தொங்கி தற்­கொலை செய்து கொண்­ட­தாகவும் நாட­க­மா­டி­ய­வரும் இதே மெள­ல­வி­தான்.

இச் சம்­பவம் தற்­கொ­லைதான் என கதை பரப்பி குறித்த மெள­லவி தப்­பிக்க முனைந்த போதிலும் இதனைக் கொலை என நிரூ­பிப்­ப­தற்குத் தேவை­யான ஆதா­ரங்­களும் சாட்­சியங்­­களும் கிடைக்கப் பெற்­றுள்­ள­தாக விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து வரும் பொலிசார் தெரி­விக்­கின்­ற­னர்.

முஸ்லிம் சமூ­கத்தை பேர­திர்ச்­சிக்­குள்­ளாக்­கிய இச் சம்­பவம் தொடர்­பில் சம்­பந்­தப்­பட்ட மெள­லவி கைது செய்­யப்பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள நிலையில் இச் சம்­பவம் தொடர்­பான விசா­ர­ணை­களை அம்­பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதி­பரின் வழி­காட்­டலில் சாய்ந்­த­ம­ரு­­து பொலி­சார் முன்­னெ­டுத்து வரு­கின்­ற­னர்.

இந் நிலையில் சம்­பவ தின­த்­த­ன்று என்ன நடந்­தது என அம் மத்­ர­சாவில் உத­வி­யா­ள­ராக கட­மை­யாற்­றிய சாய்ந்­த­ம­ருதைச் சேர்ந்த பெண்மணியைச் சந்­தித்து உரை­யா­டினோம். அவ­ரது வாக்கு­­மூ­லத்தை அவ்­வாறே தரு­கி­றோம்.

‘‘ நான் அன்றைய தினம் இரண்டரை மணிக்கு மத்ரசாவினுள் நுழைந்­த போது மரணித்த மாணவனான முஸ்­அப்பை கண்டேன். சாப்பிட்டுவிட்டு வந்து கொண்­டி­ருந்­­தார். பின்னர் நான்க­ரை மணியளவில் மத்­­ர­சா­வி­லி­ருந்து வீட்­டுக்கு வந்து மீண்டும் 6.30 மணி­ய­ளவில் மத்ரசாவுக்கு சென்றேன். அப்போது இந்த சம்பவம் நடந்­து முடிந்திருக்க வேண்டும்.

நான் மேல் மாடிக்குச் சென்று எனது பேஸ் கவரை கழற்றி விட்டு ஒரு தூணில் சாய்ந்து கொண்டு நின்ற போது மேல் மாடியில் இருக்கின்ற பிள்ளைகள் மஹ்ரிப் தொழுவதை அவதானித்தேன். அந்த நேரம் கீழ் தளத்திலே இருந்த மாணவர்கள் தொழவில்லை. அப்போதுதான் மத்ரசா அதிபரான சானாஸ் மௌலவி ‘ஒரு ஆள அடித்து வளர்த்தாட்டி வச்சிருக்கன்’ என்றார். எனக்கு மட்டுமல்ல அவ்விடத்தில் நின்ற அனைவருக்கும் அவர் கூறிய இந்த வார்த்தை தெளி­வாக கேட்­ட­து.

https://chat.whatsapp.com/KeWu0zX0LnaKS6msFOrALy

அப்போது நான் ‘யார வளத்தாட்டி வச்சிருக்கிறீங்க’ என கேட்டேன். அதற்கு அவர் யாரை அடித்­துள்ளேன் என்று பெயர் குறிப்பிடவில்லை. பின்னர் நான் எதற்கு அடித்தீர்கள் என்று கேட்டேன். ‘நின்று கொண்டு தலையில் தொப்பி இல்லாமல் சூ பேய்ந்தான்’ என்று கூறிவிட்டு அத்­துடன் கதையை மௌலவி நிறுத்தி விட்டார்.

பின்னர் நான் ஓடி வந்து மதரசாவின் சி.சி.ரி.வி கமராவைப் பார்த்துக் கொண்டு நின்றேன். அந்த நேரம் ஒரு மாணவன் ஓடி வந்தான். அதன் பின்னர் இன்னும் சில மாணவர்கள் ஓடி வந்தார்கள். பிறகு ஏனைய மாணவர்கள் எல்லோரும் ஓடி வந்தார்கள். என்ன சுனாமியா வந்­து­விட்­டது? ஏன் மாணவர்கள் எல்லாம் ஓடுகிறார்கள் என்று எனக்­குள் நினைத்துக் கொண்­டேன்.

அந்த நேரம் மௌலவியின் சகோதரர் கதவைத் திறந்து கொண்டு வந்தார். பின்னர் மரணித்த மாணவனை பாத்ரூம் பகுதியில் இருந்து தூக்கிக் கொண்டு வந்தார்கள். என்ன என்று கேட்டேன். முஸ்அப் மயங்கி விழுந்துவிட்டான் என மௌலவி கூறினார்.

எப்படி மயக்கமுற்றார் என நான் மாறிக் கேட்ட போது ‘பாம்பு கடிச்ச’ என்றார் மௌலவி. பின்னர் பாத்ரூமுக்குள் பாம்பா என நான் கேட்டதற்கு அவர் எந்த பதிலும் தர­வில்லை.

அப்படியென்றால் மயக்கமுற்ற மாணவனுக்கு முதலுதவி செய்யுங்கள் என்று சொன்னேன். ஆனால் மெளலவி அதை கணக்கெடுக்கவில்லை. அதேநேரம் மாணவர்கள் ஏனைய முஅல்லிம்கள் எல்லோரும் மேல்மாடியிலேயே நின்றார்கள். இது அனைவருக்கும் தெரியும். பின்னர் மாணவனுக்கு சிலர் முதலுதவியை செய்தார்கள். இதனை கீழே இருக்கின்ற சி.சி.ரி.வி. கமராவில் பார்த்துக் கொண்­டி­ருந்­தேன்.

பின்னர் காத்தான்குடியைச் சேர்ந்­த மாணவன் ஒருவன் ஓடி வந்து ‘அந்த பொடியன் மௌத்தாகிட்டான்’ என்று சொன்னான். அவ்­வா­று சொன்ன மாண­வன் அந்த மரணித்த மாண­வ­னின் உறவுக்காரராக இருக்க வேண்டும் என்று நினைக்கின்றேன்.

அதன் பிறகு மற்­றொரு மாண­வர் ஓடி வந்து சி.சி.ரி.வி கமராவின் சுவிட்சை ஓப் பண்ணினார். பின்னர் கமராவில் எதுவும் தெரியவில்லை.

அதற்கு பிறகு மௌலவி தொலைபேசியில் ஏதோ பேசினார். பின்னர் மூன்று பேர் வந்தார்கள். சி.சி.ரி.வி.கமராவின் வயர்களை கழற்றினார்கள். நான் அத்தோடு அங்கு ஓரி­டத்தில் அமர்ந்­துவிட்டேன். கேர்ட்டின் சீலையை இழுத்து மறைத்துவிட்டார்கள். பின்னர் பிள்­ளை­க­ளி­டம் பாடத்தை கேளுங்கள் என்று கூறிவிட்டு மௌலவி அங்­கி­ருந்து சென்றுவிட்­டார்.

ஏதோ ஒரு சம்பவம் நடந்துவிட்டது என்பதை நான் உணர்ந்தேன். பின்னர் மர­ணித்த மாணவன் யார் என்று விசாரித்தேன். அப்போதுதான் முஸ்அப் என்று சொன்னார்கள். கண் கலங்கி பீதியடைந்தேன். அதிர்ச்­சியில் உறைந்து போனேன். நான் பகல் தானே முஸ்அப்பை கண்டேன் என்று கூறி அழுதேன்’’ என்­றார்.
நடந்த விட­யங்­களை பொலி­சா­ருக்கு வாக்கு மூலம் வழங்­கி­யுள்ள இப் பெண்­மணி தொடர்ந்தும் விசா­ர­ணை­க­ளுக்கு பூரண ஒத்­து­ழைப்பு வழங்­கு­வ­தாகத் தெரி­வித்­துள்­ளார்.

சிசி­ரிவி பதி­வு­களை அகற்றக் கோரிய மெள­ல­வி

அதே­போன்­றுதான் சிசி­ரிவி பதி­வு­களை அகற்றி­ச் சென்­ற­வர்­களும் நடந்த விட­யங்­களை பொலி­சா­­ருக்கு வாக்­கு­மூ­ல­மாக வழங்­கி­யுள்­ளனர். இம் மத்­ர­சாவில் சிசி­ரிவிகளை பொருத்திக் கொடுத்த சேவை வழங்­கு­னரை நாம் சந்­தித்­துப் பேசி­னோம்.

‘‘ சம்பவ தினமன்று இரவு 7 மணியளவில் மௌலவி பதற்றத்துடன் எனக்கு தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்­டு உடனடியாக மத்ரஸாவிற்கு வந்து சிசி­ரிவி பதி­வு­களை அழிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதற்கு நான் என்னால் வரமுடியாது என கூறிவிட்டேன். அத்துடன் ஏன் அவற்றை அழிக்க வேண்டும் என கேட்டதற்கு அவர் பதி­ல­ளிக்­கவில்லை. பின்னர் எனது சகோதரரின் தொலைபேசி இலக்கத்தை அனுப்பி அவரைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொண்டேன். பின்னர் இரவு 11 மணியளவில் மத்­ர­சாவில் மாணவர் ஒருவர் மர­ணித்­து­விட்­ட­தாக பதற்ற நிலை ஏற்பட்ட பின்­னர்தான் எனது சகோதரர் என்னைத் தொடர்பு கொண்­டு­ நாங்கள் சிசிரிவி பரிசோதனை மேற்கொண்ட மத்ரஸாவில் தான் மாணவன் மரணமாகியுள்ளதாக என்னிடம் குறிப்பிட்டார்.

நான் அவரிடம் அங்கு என்ன செய்தீர்கள் எனக் கேட்டேன். அதற்கு சிசிரிவியில் பதி­வா­கி­யி­ருந்த காணொளிகளை அழிக்குமாறு மௌலவி கேட்டதாகவும் ஹார்ட் டிஸ்­கினை அகற்றிச் செல்­லு­மாறும் மூன்று தினங்­களின் பின்னர் அதனைக் கொண்டு வந்து பொருத்­தித் தரு­மாறு கேட்­ட­தா­கவும் சொன்னார். இதற்­காக 1000 ரூபா பணத்தையும் மெள­லவி வழங்­கி­யுள்ளார். அது­மாத்­தி­ர­மன்றி பதற்ற நிலை தோன்­றிய பிற­கு குறித்­த மௌலவி அடிக்கடி தொலைபேசி அழைப்­பை எடுத்து அழித்த சிசிரிவி காணொளிகளை மீண்டும் எடுக்க முடியுமா என கேட்டுக் கொண்டே இருந்­த­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டார். சிசி­ரிவியை அகற்றிய மூவ­ரி­டமும் பொலிசார் வாக்­கு­மூலம் பெற்­றுள்­ளனர்.

அதே­போன்­றுதான் இம் மத்­ர­சாவில் கல்வி கற்று சம்­பவம் நட­ப்­ப­தற்கு ஒரு மாதத்­திற்கு முன்­ன­ராக விலகி வீடு சென்ற காத்­தான்­கு­டியைச் சேர்ந்த மாண­வர் ஒரு­வ­ரையும் நாம் சந்­தித்­தோம். மத்ரசாவின் அதி­ப­ரான சானா­ஸ் மெள­லவி எவ்­வ­ளவு கொடூ­ர­மாக நடந்து கொள்வார் என்பதை அவ­ரது அனு­ப­வத்தில் இருந்து அறிந்து கொள்ள முடி­கி­றது.

நானும் ஜனா­ஸா­வா­கத்தான்
வந்­தி­ருப்­­பேன்’’

‘‘மதரசா அதிபர் மௌலவி அவர்கள் மாணவர்களை தாக்குவார். வயர், திரைச்சீலையை தொங்க விடும் பொல்லு, தடி போன்றவைகளி னாலேயே தாக்குவார். அங்குள்ள சிரேஷ்ட மாணவர்கள் எங்களைப் போன்ற சின்ன வகுப்பு மாணவர்களை வேண்­டு­மென்றே பிழையாக சொல்லிக் கொடுப்பார்கள். அப்போதெல்லாம் அவர் எங்களைத் தாக்குவார். என்னையும் பல தடவைகள் தாக்கியுள்ளார்.

Exit mobile version