அனுராதபுரத்திற்கும் மஹவவிற்கும் இடையிலான ரயில் சேவையை தற்காலிகமாக மூட தீர்மானம்

வடக்கு ரயில் வீதியின் அனுராதபுரத்திற்கும் மஹவவிற்கும் இடையிலான ரயில் சேவையை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வடக்கு ரயில் வீதியின் இரண்டாம் கட்ட நவீனமயமாக்கல் பணிகள் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி ஜனவரி 7ஆம் திகதி முதல் 06 மாத காலத்திற்கு குறித்த வீதியில் இயங்கும் ரயில்கள் தற்காலிகமாக நிறுத்தப்படும்.

Exit mobile version