மாத்தறை வெலிகம-பெலன பகுதியில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் பொலிஸ் அதிகாரியொருவர் கொல்லப்பட்டுள்ளதோடு மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடையாளம் தெரியாத நபரொருவரினால் இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகம பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
