சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவின் அறிக்கை அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியின் தலைமையில் இந்த அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை உப குழு
சர்வதேச கிரிக்கெட் பேரவையினால், சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டமை தொடர்பில் தேவையான தீர்மானங்களை மேற்கொள்வதற்காக அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் குறித்த அமைச்சரவை உப குழு நியமிக்கப்பட்டது.
