முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பனாதர தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
தன்னை பிரத்தியேக செயலாளராக நியமித்த அரசியல்வாதிக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக சுகீஸ்வர பண்டார முன்னாள் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
புதிய அரசியல் பயணத்தை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாகவும், அதன் காரணமாகவே பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாகவும் சுகீஸ்வர பண்டார மேலும் தெரிவித்துள்ளார்
