பூமியில் விழுந்த ஐரோப்பிய செயற்கைக்கோள் என்ன ஆனது?

பூமியில் விழுந்த ERS - 2 செயற்கைக்கோள்

பூமியின் தட்பவெப்பநிலையை கண்காணிக்கப் பயன்படுத்தப்படும் பல தொழில்நுட்பங்களுக்கு முன்னோடியாக இருந்த ஐரோப்பிய செயற்கைக்கோள் பூமியில் விழுந்துள்ளது.

ERS-2 எனப்படும் இரண்டு டன் எடையுள்ள இந்த விண்கலம் பசிபிக் பெருங்கடலுக்கு மேலே வளிமண்டலத்திலேயே எரிந்தது.

எனினும் இதை பூமியில் இருந்து யாரும் கண்டதாக இதுவரை தகவல் இல்லை.

ERS-2 என்பது வளிமண்டலம், நிலம் மற்றும் கடல்களை புதுமையான வழிகளில் ஆய்வு செய்வதற்காக 1990-களில் ஐரோப்பிய விண்வெளி முகமையால் தொடங்கப்பட்ட திட்டங்களுள் ஒன்றாகும்.
BBC

Exit mobile version