அனைத்து ரஷ்ய மற்றும் உக்ரேனிய சுற்றுலா பயணிகளையும் 14 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல் தொடர்பில் விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு (PMD) படி, அமைச்சரவையின் முன் அனுமதியின்றி இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
சில வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டில் சட்டவிரோத வியாபாரங்களை நடத்தி வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
TIO
