இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, குறிப்பிடத்தக்க சவால்களை எதிர்கொண்டிருந்த நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கு கடந்த இரண்டு வருடங்களாக அரசாங்கம் மேற்கொண்டுள்ள ஒருங்கிணைந்த முயற்சிகளை எடுத்துரைத்தார். மூலோபாய சீர்திருத்தங்களின் ஊடாக பொருளாதாரத்தை மீட்சியை நோக்கி நகர்த்துவதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை வலியுறுத்திய ஜனாதிபதி, அனைவரினதும் கூட்டு ஆதரவுடன் இந்த முயற்சிகளை தொடர்வதற்கான தனது உறுதியை வெளிப்படுத்தினார்.
அரசியல் வேறுபாடுகள் இன்றி, நாட்டுக்கான பொதுவான நிகழ்ச்சி நிரலின் கீழ் ஒன்றிணையுமாறு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் விடுத்துள்ள பகிரங்க அழைப்பை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, தேசத்தைக் கட்டியெழுப்பும் முயற்சிகளின் ஒரு பகுதியாக அனைத்து அரசியல் கட்சிகளின் ஆக்கபூர்வமான முன்மொழிவுகளையும் ஏற்றுக்கொள்வதற்குத் தாம் விருப்பம் உள்ளதாக மீண்டும் வலியுறுத்தினார்.
நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, ஏனைய அரசியல் கட்சிகளை பங்குபற்ற அனுமதிக்குமாறு விடுத்த கோரிக்கைக்கு ஜனாதிபதி சாதகமாக பதிலளித்தார்.
