எதிர்வரும் வெள்ளிக்கிழமை (மார்ச் 01) வரை வெப்பநிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், மாணவர்கள் கடுமையான வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தடுக்குமாறு அனைத்துப் பாடசாலைகளுக்கும் கல்வி அமைச்சு நேற்று (28) உத்தரவு பிறப்பித்துள்ளது.
தடை விளையாட்டு சந்திப்புகள், விளையாட்டு நடைமுறைகள் மற்றும் பிற முன் திட்டமிடப்பட்ட வெளிப்புற நடவடிக்கைகளுக்கு பொருந்தும்.
இந்த வழிகாட்டுதல்களை பாடசாலை அதிபர்களுக்கு அறிவிக்குமாறு மாகாண மற்றும் வலயக் கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
