போதைப்பொருளை பயன்படுத்தும் பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள்: கொழும்பு கோட்டையில் பொலிஸ் விசேட நடவடிக்கை

கொழும்பு கோட்டை பகுதியில் பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு போதைப்பொருள் விநியோகம் செய்யும் மோசடி கும்பலை அணைத்தெரு பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட பொலிஸ் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கோட்டை பகுதியில் இருந்து சேவையில் ஈடுபடும் பஸ்களின் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் கடமையின் போது தினமும் போதைப்பொருளை உட்கொள்வதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

போதைப்பொருளை விநியோகித்ததாக சந்தேகிக்கப்படும் நபரையும், அவரிடமிருந்து போதைப்பொருட்களை வாங்கிய பல பஸ் ஊழியர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Exit mobile version