நடிகர் என தமிழ்ச் சினிமாவில் தனக்கான இடத்தைப் பிடித்திருப்பவர், சமுத்திரக்கனி. வில்லன், குணச்சித்திரம், முதன்மைக் கதாபாத்திரம் என கோலிவுட்டை முழு ரவுண்ட் அடித்த சமுத்திரக்கனி, இன்று டோலிவுட்டின் செல்லப்பிள்ளை. தெலுங்கு சினிமா இவரை அரவணைத்துக் கொண்டாடி வருகிறது.
ராஜமெளலி, த்ரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் போன்ற சீனியர் இயக்குநர்கள் தொடங்கி, அறிமுக இயக்குநர்கள் வரை சமுத்திரக்கனியின் கால்ஷீட் கேட்கிறார்கள்.
ஷங்கர் இயக்கத்தில் `இந்தியன் 2′, `கேம் சேஞ்சர்’ தவிர, இரண்டு தெலுங்குப் படங்கள் என செம பிஸியாக ஓடிக்கொண்டிருந்தவர், தான் நடித்து வெளியாகியிருக்கும் `யாவரும் வல்லவரே’ படத்தின் புரொமோஷனுக்காக ஹைதராபாத்தில் இருந்து சென்னை வந்திருந்தார். அவருடன் நடந்த 20 நிமிட உரையாடலிலிருந்து….