கோட்டை அருகே போராட்டத்தை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்

கொழும்பு – கோட்டைக்கு அருகில் இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்ட பேரணியை கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரைகளை பிரயோகித்துள்ளனர்.

‘ஜன அறகல வியாபரய’ (மக்கள் போராட்ட இயக்கம்) அமைப்பினால் இந்த எதிர்ப்பு ஊர்வலம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொருட்களின் விலை உயர்வு மற்றும் அரசாங்கத்தின் வெளிநாட்டு ஒப்பந்தங்கள் உட்பட பல விடயங்களை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணி கொழும்பு – கோட்டையை வந்தடைந்தவுடன் பொலிஸாரால் கலைக்கப்பட்டது

Exit mobile version