டெல் அவிவ் உள்ளிட்ட நகரங்கள் இலக்காக: ஈரானின் புதிய ஏவுகணைத் தாக்குதல்..

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC), இஸ்ரேலுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் “உண்மை வாக்குறுதி 4” என்ற ராணுவ நடவடிக்கையின் 28வது அலையைத் தொடங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தத் தாக்குதலில் புதிய தலைமுறை ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது. குறிப்பாக டெல் அவிவ், பீர்ஷேபா போன்ற இஸ்ரேலின் முக்கிய நகரங்களும், ஜோர்டானில் உள்ள அஸ்ராக் விமானப்படைத் தளமும் இலக்காகக் கொண்டு இந்த ஏவுகணைகள் ஏவப்பட்டதாக கூறப்படுகிறது.

தொடர்ச்சியாக நடைபெறும் இந்தத் தாக்குதல்கள் காரணமாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் அதிகரித்து, நிலைமை மிகுந்த பதற்றத்துக்கு உள்ளாகியுள்ளது.

Exit mobile version