ஹோர்மூஸ் நீரிணையை மீட்க பிரான்ஸ் நடவடிக்கை

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றமான சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு ஹோர்மூஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான முன்னோடியில்லாத இராணுவ நடவடிக்கையை பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் அறிவித்துள்ளார்.

எரிசக்தி மற்றும் வர்த்தகப் போக்குவரத்தை உறுதி செய்வதற்காக மத்திய கிழக்கு கடற்பரப்பில் தனது கடற்படையின் பெரும் பகுதியை நிலைநிறுத்த பிரான்ஸ் உத்தரவிட்டுள்ளது.

இது தற்காப்பு மற்றும் பாதுகாப்பு ரீதியிலான நடவடிக்க என பிரான்ஸ் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Exit mobile version