இளைஞர்களுக்கான கிரிக்கெட் கனவு – மலிங்க தொடங்கிய திறன் மேம்பாட்டு திட்டம்


இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் Lasith Malinga இளைஞர்களுக்கான புதிய திறன் மேம்பாட்டு முயற்சியை ஆரம்பித்துள்ளார். நாட்டின் பல பகுதிகளில் உள்ள இளம் திறமைகளை கண்டறிந்து வளர்க்கும் நோக்கத்துடன் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்கு இளைஞர்களிடையே மிகுந்த ஆர்வம் காணப்பட்டு வருகிறது. தற்போது வரை 3,500-க்கும் மேற்பட்டோர் இதில் பதிவு செய்துள்ளதாக மலிங்க தெரிவித்துள்ளார்.

அதிகளவான விண்ணப்பங்கள் கிடைத்ததனால், பதிவு செய்ய பயன்படுத்தப்பட்ட இணையதள இணைப்பு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். புதிய விண்ணப்பதாரர்கள் பதிவு செய்யும் வகையில் அந்த இணைப்பு 2026 ஏப்ரல் 14 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் கட்டங்களாக நடைபெறவுள்ளது. மொத்தமாக 10 கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்வில், ஒவ்வொரு கட்டத்திலும் சுமார் 350 வீரர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

மாகாண மற்றும் மாவட்ட அளவிலான தேர்வுகளின் அடிப்படையில் முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்ட 350 இளம் வீரர்களின் பெயர்ப் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்.

இந்த முயற்சி மூலம் எதிர்காலத்தில் இலங்கைக்கு புதிய கிரிக்கெட் நட்சத்திரங்களை உருவாக்க முடியும் என விளையாட்டு ரசிகர்கள் நம்பிக்கை வெளியிட்டு வருகின்றனர்.

Exit mobile version