துபாயில் தற்போது மீண்டும் தாக்குதல்..!
துபாயில் பாதுகாப்பு பதற்றம் அதிகரித்துள்ளது. துபாய் க்ரீக் ஹார்பர் பகுதியில் உள்ள Address ஹோட்டல் அருகே ட்ரோன் தாக்குதல் நடந்த சில நிமிடங்களுக்குப் பிறகு, துபாய் சர்வதேச விமான நிலையம் அருகிலும் ட்ரோன் தாக்குதல் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது இன்று ஒரே நாளில் துபாய் விமான நிலையத்தை குறிவைத்து நடத்தப்பட்ட இரண்டாவது தாக்குதலாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் குறைந்தது 4 பேர் காயமடைந்ததாக ஆரம்ப தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகாரிகள் உடனடியாக அவசர பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
க்ரீக் ஹார்பர் பகுதியில் ட்ரோன் விழுந்ததால் ஒரு கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டதாகவும் அங்கிருந்தவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும் துபாய் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
