சவுதி தளங்களை பயன்படுத்த அமெரிக்காவுக்கு அனுமதி இல்லை? – மேற்கு ஆசியாவில் பதற்றம்

அமெரிக்க படைகள் சவுதி அரேபியாவை விட்டு வெளியேறுகின்றன என்ற தகவல்கள் பரவி வருகின்றன.

ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்களின் அச்சுறுத்தலைத் தொடர்ந்து, சவுதி அரேபியாவில் உள்ள சில அமெரிக்க ராணுவத் தளங்களில் இருந்து குறிப்பிட்ட ராணுவ உபகரணங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உதாரணமாக, பிரின்ஸ் சுல்தான் விமானத் தளத்தில் இருந்து டேங்கர் விமானங்கள் போன்ற சில தளவாடங்கள் மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், ஈரானுக்கு எதிரான தாக்குதல்களுக்கு தங்கள் வான்வெளியையோ அல்லது ராணுவத் தளங்களையோ பயன்படுத்த அமெரிக்காவுக்கு சவுதி அரேபியா அனுமதி வழங்கவில்லை என சில ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இதற்கிடையில், மேற்கு ஆசியாவில் உள்ள அனைத்து அமெரிக்க ராணுவத் தளங்களும் வெளியேற வேண்டும் என்பதைக், ஈரான் தனது போர் நிறுத்த நிபந்தனைகளில் ஒன்றாக முன்வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும், இந்த தகவல்கள் குறித்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல்கள் வெளியாகியுள்ளனவா என்பது தெளிவாக இல்லை.

Exit mobile version