எதிர்வரும் 14ஆம் திகதி வரவு செலவுத் திட்ட உரை சமர்ப்பிப்பு – நாடாளுமன்றத்தில் விசேட பாதுகாப்பு!

நிதியமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 14ஆம் திகதி நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட உரையை சமர்ப்பிக்கவுள்ளார்.

இதன் காரணமாக அன்றைய தினம் நாடாளுமன்ற வளாகத்தில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற நடவடிக்கைகள் இன்று (வியாழக்கிழமை) ஆரம்பமாகிய நிலையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version