உக்ரைனின் தெற்கில் இருக்கும் ஹெர்சன் நகரைவிட்டு ரஷ்யப் படை வெளியேறுவதாக அறிவித்த பின்னர் உக்ரைன் அங்கு தொடர்ந்து வெற்றிபெறுவதாகக் கூறியுள்ளது.
ஹெர்சன் பெருநகருக்குச் சுமார் ஐம்பது கிலோமீற்றர் வடக்கே இருக்கும் ஸ்னியூரிவ்கா நகரைக் கைப்பற்றிவிட்டதாக உக்ரைன் தெரிவித்தது.
ஹெர்சன் நகரைவிட்டு ரஷ்யா வெளியேறுவதாகக் கூறுவது ஒரு போர்த் தந்திரமாகவும் இருக்கலாம் என்று உக்ரைனிய அதிகாரிகள் கூறினர்.
இதற்கிடையே இதுவரை போரில் இருநூறு ஆயிரம் ராணுவத்தினர் உயிரிழந்திருப்பதாக அமெரிக்க உயர்தளபதி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த பெப்ரவரி 24 முதல் இதுவரை தரப்புக்கு நூறாயிரம் பேர் பலியாகி இருப்பதாக அவர் தெரிவத்துள்ளார்.
ஆனால் ரஷ்யாவும் உக்ரைனும் உயிரிழப்பு விபரத்தை இதுவரை வெளியிடவில்லை.
