இரட்டைக் குடியுரிமை விவகாரம் : டயானா குறித்து விசாரணை !

இரட்டைக் குடியுரிமைக்கு எதிரான இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் மனு விசாரணைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை நீக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை விசாரிப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (28) அனுமதி வழங்கியது.

மேலும் அவரது குடியுரிமை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு குடிவரவு கட்டுப்பாட்டாளருக்கு நீதிமன்றம் அறிவித்துள்ளது

Exit mobile version