கொழும்பு துறைமுகத்தில் உலகின் அதிசொகுசு உல்லாச கப்பல்!

உலகின் அதி சொகுசு வாய்ந்த ‘மெயின் ஷிப் 5’ (Mein Schiff 5) கப்பல் 2000க்கும் மேற்பட்ட பயணிகளுடன் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

குறித்த கப்பலில், 2,030 சுற்றுலாப் பயணிகளும் 945 கப்பல் பணியாளர்களும் வந்துள்ளனர்.

இந்தக் கப்பல் இன்று இரவு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நோக்கிச் செல்லவுள்ளதுடன், நாளை இரவு 09 மணிக்கு நாட்டிலிருந்து புறப்படவுள்ளதாக ஹார்பர் மாஸ்டர் நிர்மால் சில்வா குறிப்பிட்டார்.

இதேவேளை, இந்த கப்பலில் நாட்டை வந்தடைந்த சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலானோர் ஐரோப்பியாவை சேர்ந்தவர்கள் என அமைச்சர் நளின் பெர்னாண்டோ தமது ட்விட்டர் பதிவினூடாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இதேபோன்ற நான்கு சொகுசு கப்பல்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் இலங்கையை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை துறைமுக தகவல் தரப்புகள் தெரிவித்துள்ளன.

Exit mobile version