இலங்கையில் உள்ள சீன தூதரகத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோர் விஜயம்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஆகியோர் இலங்கையில் உள்ள சீன தூதரகத்திற்கு நேற்று (வெள்ளிக்கிழமை) விஜயம் மேற்கொண்டு இருந்தனர்.

சீனாவின் முன்னாள் ஜனாதிபதிக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையிலேயே இவர்கள் சீன தூதரகத்திற்கு சென்றிருந்தனர்.

இதன்போது சீன தூதுவரை சந்தித்த இருவரும் தமது அனுதாபங்களை பகிர்ந்துக்கொண்டனர்.

இதவேளை சீனாவின் முன்னாள் ஜனாதிபதி ஜியாங் ஸேமின் 1989ம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டு வரை சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக கடமையாற்றிதோடு 1993ம் ஆண்டு முதல் 2003ம் ஆண்டு வரை சீனவின் ஜனாதிபதியாகவும் பதவி வகித்தமை குறிப்பிடதக்கது.

Exit mobile version