காரைநகரில் இறைச்சிக்காக மாடு வெட்டியவர் கைது

ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காரைநகர் நெடுங்காடு பகுதியில் நேற்றுப் புதன்கிழமை இறைச்சிக்காக மாட்டை வெட்டிய குற்றச்சாட்டின் கீழ் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தின் கண்காணிப்பின் கீழ் இயங்கும் காரைநகர் பொலிஸ் காவலரண் பொலிஸாரால் இக்கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

சுற்றிவளைப்பின் போது இருவர் தப்பிச் சென்றுள்ள நிலையில் வீட்டின் உரிமையாளர் மாட்டு இறைச்சியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version