தொல்பொருள் இடங்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த நடவடிக்கை!

தொல்பொருள் இடங்களின் பாதுகாப்பிற்கு பொலிஸ், சிவில் பாதுகாப்புப் படையினர் மற்றும் ஆயுதப்படையினரின் ஆதரவு கிடைத்துள்ளதாக தொல்பொருள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக தொல்பொருள் இடங்களுக்கு சேதம் விளைவிக்கும் செயற்பாடுகள் அதிகரித்துள்ளது.

இதன்காரணமாகவே குறித்த பகுதிகளை பாதுகாக்கும் நோக்கில் இவர்களின் உதவி கோரப்பட்டுள்ளதாக தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சிரேஷ்ட பேராசிரியர் அனுர மனதுங்க தெரிவித்துள்ளார்.

Exit mobile version