1.2 மில்லியன் விவசாயக் குடும்பங்களுக்கு நிதியுதவி!

1.2 மில்லியன் விவசாயக் குடும்பங்களுக்கு பயனளிக்கும் வகையில் ஜனாதிபதியின் கோரிக்கைக்கு அமைய, 08 பில்லியன் ரூபாவினை ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, ஒரு ஹெக்டேருக்கு குறைவாக விவசாயம் செய்யும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10 ஆயிரம் ரூபாயும், மற்றும் ஒரு ஹெக்டேருக்கு மேல் விவசாயம் செய்யும் குடும்பங்களுக்கு 20 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

அடுத்த வாரம் முதல் விவசாயிகளின் கணக்கில் பணம் வைப்பு செய்யப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

Exit mobile version