முட்டை ஒன்றை 55 ரூபாவுக்கு மேல் கொள்வனவு செய்ய வேண்டாம்-கோழிப்பண்ணை வியாபாரிகள் சங்கம்

ஒரு முட்டையை 55 ரூபாவுக்கு மேல் கொள்வனவு செய்ய வேண்டாம் என அகில இலங்கை கோழிப்பண்ணை வியாபாரிகள் சங்கம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பில் நேற்று (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அதன் தலைவர் அஜித் குணசேகர இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

சந்தையில் ஒரு முட்டை 55 ரூபாவுக்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் குறிப்பிட்டுள்ளனர்.

Exit mobile version