கடந்த ஆறு நாட்களில் நாடு முழுவதும் சுமார் 265 வாகன விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்துக்கள் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரை பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மற்றும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
இந்த வாகன விபத்துக்களில் 25 பேர் உயிரிழந்துள்ளதாகவும், நாளொன்றுக்கு சராசரியாக 5 பேர் உயிரிழப்பதாகவும் அவர் கூறினார்.
இவ்வாறான நிலைமைகளின் கீழ் வாகனம் செலுத்துவது சக்கர வாகனத்தில் பயணிப்பவர்கள், பயணிகள், சக வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால், வாகன ஓட்டிகள் போதையில் வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்குமாறு பொலிஸ் பேச்சாளர் கேட்டுக்கொண்டார்.
பண்டிகைக் காலங்களில் வாகன சாரதிகள் கூடுதல் அவதானத்துடன் செயற்படுமாறு அவர் கேட்டுக்கொண்டதுடன், பாதசாரிகளும் தமது சுற்றுப்புறங்களை உன்னிப்பாக அவதானித்து எப்போதும் நடைபாதையில் பயணிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
